Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/திருவள்ளுவர்/நன்றி மறப்பது நன்றன்று!

நன்றி மறப்பது நன்றன்று!

நன்றி மறப்பது நன்றன்று!

நன்றி மறப்பது நன்றன்று!

ADDED : ஜூலை 15, 2012 10:07 AM


Google News
Latest Tamil News
* தக்க சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயன் கருதாமல் செய்யும்போது அதன் மதிப்பு இந்த உலகத்தை விட பெரியது.

* நெறிமுறைகளைப் பின்பற்றி நல்ல முறையில் வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து வணங்கப்படுவான்.

* அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர்களின் துன்பத்தைக் கண்டவுடன், அது தானாக வெளிப்பட்டு விடும்.

* சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். சொன்ன வாக்கை காப்பாற்றுவது அரிதானது.

* ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், அவர் செய்த தீமையை உடனே மறந்து விட வேண்டும்.

* நமக்கு அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு. பகைவர்களிடம் இருந்து காக்கும் அரணாக அது விளங்கும்.

* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய தீயபண்புகள் நம்மைச் சேராதபடி வாழ்வு நடத்த வேண்டும்.

- திருவள்ளுவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us